புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) மாணிக்கவாசகருக்கான ஆலயம் உள்ளது. இங்கு தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது ஆனி திருமஞ்சனத் திருவிழா தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்று (03/07/2022) காலை தேரோட்டம் தொடங்கியது. சிவனடியார்கள் திருவாசகம் பாடிக்கொண்டே முன்னால் செல்ல பக்தர்கள் தேர் இழுத்துச் சென்றனர்.
ADVERTISEMENT
தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். அதேபோல், ஆங்காங்கே அன்னதான நிகழ்ச்சிகளும்நடைபெற்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments