Skip to main content

இன்ஸ்டாகிராம் போட்டோவால் சிக்கிய உண்டியல் திருடர்கள்!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
pudukottar issue by Instagram photo!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் என்ற இடத்தில் முத்துமாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சுவர் ஏறிக் குதித்து முகத்தை மூடிக்கொண்டு உள்ளே இருவர் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் கண்காணிப்பு கேமராவைப் பார்த்து முகத்தைக் காட்டி கிண்டலாகச் சிரித்துள்ளார். மற்றொருவர் கருவறையைப் பார்த்து, ஆத்தா நாங்க உங்க உண்டியலை திருடப் போறோம் காப்பாத்து என்பதுபோல தலைக்கு மேலே கைகளைத் தூக்கி கும்பிட்டுள்ளார். இதையடுத்து 3 அடி உயரமுள்ள எவர்சில்வர் உண்டியலை பின்பக்கமாக தூக்கிச் சென்று கட்டரால் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை பையில் கொட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளனர். மறைவாக வந்து கேமராவை உடைத்து தூக்கி வீசிவிட்டு உடைத்த உண்டியலை கொண்டு வந்து வைத்துவிட்டனர். அதன் பின்னர் இரும்பு உண்டியலில் தொங்கிய பூட்டை கட்டரால் உடைத்துவிட்டு லாக்கரை உடைக்க முயன்றபோது ஏற்பட்ட சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருந்து ஆட்கள் ஓடி வர அரிவாளை காட்டி மிரட்டிவிட்டு 2 பைக்குகளில் ஏறி 4 பேர் தப்பிச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் இதுபோல பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் எந்த இடத்திலும் திருடர்கள் முகம் தெரியாததால் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். ஆனால் கீரமங்கலம் உண்டியல் திருட்டு சம்பவத்தில், உண்டியல் திருடர்களில் ஒருவர் நன்றாகப் பதிவாகி இருந்தது செய்திகளில் வெளியானது. இந்த ஒருவரது முகத்தைப் பார்த்த இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்களான இளைஞர்கள் இந்த முகத்தை எங்கோ பார்த்தது போல இருந்ததால் அவர்கள் இன்ஸ்டாகிராமில் தேடியதில் முகம் காட்டி சிரித்த நபரின் படம் இன்ஸ்டாகிராமில் காணப்பட்டதை எடுத்து கீரமங்கலம் போலீசாருக்கு படங்களுடன் முகவரி, அடையாளங்களையும் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து படங்களை ஒப்பிட்டுப் பார்த்த போலீசார் தனிப்படை போலீசார் உதவியுடன், அறந்தாங்கி வட்டம் பரவக்கோட்டை கிராமத்திற்குச் சென்று உண்டியலை தூக்கிச் சென்ற நபர்களில் ஒருவரான கருப்பு வேட்டி அணிந்து கருப்பு துண்டால் முகத்தை மறைத்திருந்த நடராஜன் மகன் முத்து (வயது 19) என்பவரைக் கைது செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் முகம் காட்டி சிரித்த 17 சிறுவன் மற்றும் 17 வயது 12 வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் ஒருவர் என இரு சிறுவர்களையும் போலீசார்  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக், பூட்டுகள் உடைக்கும் கட்டர், செல்போன்கள், ரூ.4100 பணம் உள்பட பல பொருட்களையும் கைப்பற்றினர்.

மேலும், உண்டியல்களை உடைக்க மூளையாகச் செயல்பட்டு தலைமறைவாகி உள்ள மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் ஆசை சௌந்தர் (வயது 19) மற்றும் அவர்களின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருட வந்தவர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி படங்கள் பதிவிடும் பழக்கத்தில் உள்ளவர்களாக இருப்பதால் ஏராளமான படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். உண்டியல் திருடப்பட்ட கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் எடுத்த படங்களும் பதிவிட்டுள்ளனர். இந்த படங்களே இவர்களை விரைந்து சிக்க வைத்துவிட்டது. இன்ஸ்டாகிராம் படங்களும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது பதிவான சிசிடிவி படங்களையும் வைத்தே இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் என்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.