ADVERTISEMENT

தொடங்கியது ரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம்...

06:18 PM Nov 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று தொடங்கி வருகிற 12-ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ரங்க நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார்.

அங்கு ரங்க நாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை பூஞ்சோலை உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6:30 மணி முதல் காலை 7.30மணி வரை காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலவர் சேவை உண்டு.மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT