ADVERTISEMENT

ஸ்டாலின் போல் அமைத்திருந்தால் பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது - திருச்சி சிவா

06:03 PM Jun 11, 2019 | kalaimohan

திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான திருச்சி சிவா பேசுகையில், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்திருக்கிறது என வட இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களும், பெரிய பத்திரிகையாளர்கள் எல்லோரும் சொல்லிவருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்ததை போல் வட இந்தியாவில் ஒருங்கிணைத்திருந்தால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்காது என்று நாடே பேசுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தின் நலனுக்காக திமுக கூட்டணி எம்.பிகளின் குரல் மக்களவையில் ஓங்கி ஒலிக்கும் தமிழகத்தில் அதிமுக ஆட்டம் கண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு கலைஞரின் பிறந்தநாளின் போது திமுக ஆட்சியில் அமர வேண்டும். சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்வோம். அந்த இலக்கை அடைய பாடுபடுவோம் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT