ADVERTISEMENT

வாக்கு எண்ணிக்கையில் 15,904 ஊழியர்கள்...100 மீட்டருக்கு வெளியில் சென்றால் முகவர்களுக்கு மீண்டும் அனுமதியில்லை

06:29 AM May 23, 2019 | kalaimohan

ADVERTISEMENT

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மக்களவைத் தொகுதி தவிர நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதேபோல் தமிழகத்தில் 45 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 39 மக்களவை தேர்தல் 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 11,659 ஊழியர்கள் 4,245 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 15,904 பேர் மின்னணு வாக்குகளை எண்ண உள்ளனர்.

ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகளில் எண்ணப்படும். ஒரு மேஜைக்கு ஒரு முகவர், இரண்டு கூடுதல் முகவர் என ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவர். முகவர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு மேல் வெளியில் சென்றால் மீண்டும் அனுமதி இல்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT