சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தமிழகத்திற்கு வந்து, இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுடன் இன்று (15/04/2022) காணொளி காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப., அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப., ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.