ADVERTISEMENT

திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள்- உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு! 

11:20 AM Jan 07, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு முன் ஆஜரான முத்துக்குமார், ராம்குமார் ஆதித்தனின் தரப்பு வழக்கறிஞர்கள், "கரோனா காலம் என்பதால், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு, மத்திய அரசின் பேரிடர் விதிகளுக்கு எதிரானது. மருத்துவக் குழுக்களும் 100% பார்வையாளர்களை அனுமதிக்க ஒப்புதல் தராததால், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

இதனையேற்ற நீதிபதிகள், முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் நாளை (08/01/2021) விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

மருத்துவக் குழுவினர், திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT