Skip to main content

வங்கி அதிகாரியின் வில்லங்க படங்கள்... கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று (14.02.2020) மதியம் நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதனிடம் தஞ்சை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சீனியர் வழக்கறிஞர் கணபதி என்பவர் மூலம் எட்வின் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்து, இதை ஏன் காவல்துறை தீவிரமாக விசாரிக்கவில்லை என எச்சரித்துவிட்டு வில்லங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்த அந்த வங்கி அதிகாரியின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். மேலும் 24 மணி நேரத்துக்குள் எட்வின் ஜெயக்குமாரை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

trichy district bank cashier wife and husband whatsapp social meida

அப்படி என்ன இருக்கிறது என்று அந்த இளம்பெண்ணிடம் நாம் பேசியபோது, "பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி எனக்கு திருமணம் நடந்தது. கணவர் எட்வின் ஜெயக்குமார் விராலிமலையில் உள்ள வங்கியில் காசாளராக இருக்கிறார். கல்யாணம் ஆன அடுத்த நாளில் இருந்து வீட்டுக்கு லேட்டாக நள்ளிரவில் வருவதும், வந்தவுடன் செல்போனில் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் எதேச்சையாக அவருடைய செல்போனை பார்த்த போது அவருடைய நிர்வாண படங்களும் பெண்களிடம் அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.


நான் அவரிடம் கேட்ட போது நான் இப்படித்தான் இருப்பேன். அவர்களெல்லாம் என்னுடைய தோழிகள் என்றும் நான் என் இஷ்டத்துக்கு தான் நடப்பேன். இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் நீயும் நானும் இருப்பது போன்ற படங்கள் எடுத்திருக்கிறேன். அதை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதால் பயந்து போனேன்.
 

அவர் வேலைக்கு சென்ற பின்பு வீட்டிலிருந்த பீரோவில் 15- க்கும் மேற்பட்ட செல்போன்கள் வைத்திருந்ததும், அதில் அவர் எடுத்திருந்த புகைப்படங்களில் வங்கிக்கு வரும் பெண்களை விதவிதமாக படமெடுத்து இருப்பதும், அந்த ஏரியா பகுதி பெண்களுடன் அசிங்கமாக படம் எடுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பல பெண்களுடன் அசிங்கமாக வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து இருப்பதை பார்த்து இன்னும் பயந்து போனேன்.

trichy district bank cashier wife and husband whatsapp social meida

திருமணத்திற்காக எட்வீன் ஜெயக்குமாரின் அம்மா லில்லி, அவருடைய சகோதரி கேத்ரீன், அவர்கள் சொன்னதற்கு இணங்க வரதட்சணையாக 25 பவுன் நகையும் 5 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களும், 6 லட்சத்திற்கு மேல் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடத்தினர். ஆனால் திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே என் பையன் வங்கியில் வேலை பார்க்கிறார். இந்த பணம் பத்தாது இன்னும் 50 பவுன் நகை வேண்டும் என்று டார்ச்சர் செய்தனர்.
 

ஒரு பக்கம் கல்யாணமான கணவனின் வக்கிரமான செயல், இன்னொரு பக்கம் மாமியார், நாத்தனார் வரதட்சணை கொடுமை இரண்டு பக்கமும் கொடுக்கும் டார்ச்சரை அம்மா பார்த்து சொல்ல முடியாமல் ஒரு மாதம் அவர்களிடம் நரக வேதனையை அனுபவித்தேன்.
 

இரண்டு முறை யாருமில்லாத மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்லும்போது இனி இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்று உயிருக்கு பயந்து தப்பித்து என் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன். அம்மா அப்பாவுடன் தஞ்சை டிஐஜி லோகநாதனிடம் புகார் கொடுத்தேன். அவர் வல்லம் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பி விசாரித்து, அவர்கள் மீது 498a,506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
 

இதற்கு பயந்து முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தான் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்" என்றார்.
 

வங்கியில் பணிபுரியும் அதிகாரியின் இந்த வில்லங்க செயல் இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் உங்களைப்போன்று எளிய குடும்பத்தில் பிறந்தவன்” - அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
AIADMK candidate Karupiya is actively campaigning in Trichy

திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்  மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்து தனக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் ஓட்டளிக்க வலியுறுத்தினார்.

தொடர்ந்து, இங்கிலீஷ் காய்கறி கண்டி, பூ மார்க்கெட், மீன் மார்க்கெட், வெங்காய  மண்டி உள்ளிட்ட இடங்களிலும் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்களிடம் கருப்பையா ஓட்டு சேகரித்து பேசியதாவது: அதிமுக வேட்பாளராக போட்டியிடும் நான் உங்களைப்போன்று எளிய குடும்பத்தில் பிறந்தவன். அதனால், ஒரு வியாபாரியின் மனநிலை, கஷ்டங்கள் என அனைத்தையும் அறிந்தவன். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த விஷயத்திலும் எப்போதும், இந்த கருப்பையா வியாபாரிகளின் பக்கம் தான் உறுதியாக நிற்பேன். காந்தி மார்க்கெட்டுக்காக கள்ளிக்குடியில் ஒரு மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. இப்போது பஞ்சப்பூரில் மீண்டும் ஒரு மார்க்கெட் கட்டப்போவதாக கூறியுள்ளனர். அது எப்போது வரும் என்று தெரியவில்லை.

இவ்விஷயத்தில் வியாபாரிகள் அனைவரையும் அழைத்துப்பேசி, அவர்களது கருத்தைக் கேட்டு அதனடிப்படையில், வியாபாரிகள், வியாபாரம் பாதிக்கப்படாத வகையில் அரசு சார்பில் முடிவு எடுக்க வலியுறுத்துவேன். அதேசமயம், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க என்ன வழிவகை செய்ய வேண்டும், அதற்கான உங்கள் ஆலோசனைகளை கேட்டறிந்து நடைமேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். இங்குள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. அவற்றை தீர்க்க, உங்களுடன் இருந்து உங்களுக்காக குரல் கொடுப்பேன் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

திருச்சியில் அதிமுகவுக்கு என்று எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் இல்லை. அதனால், உங்கள் குறைகளை நீங்கள் எங்கு சொன்னாலும் ஆளுங்கட்சியில் ஒரே இடத்திற்கு சென்று, அவர் மட்டும் தான் முடிவெடுப்பார். ஆனால், எம்பியாக என்னை தேர்ந்தெடுத்தால், உங்கள் குரலாக, உங்களுக்கு ஆதாரவாக, வியாபாரிகளின பிரதிநிதியாக, வியாபாரிகளின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில்  போராடுவேன். அதற்கு நீங்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய் வேண்டும்’’, என்றார்.

நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன், அதிமுக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், திருச்சி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,மாவட்ட மாணவர் அணி செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா,பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, ரோஜர் , திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கத்தின் தலைவர் வெள்ளையப்பன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட பொருளாளர் வெங்காய மண்டி தங்கராஜ், மாநில துணைத்தலைவர் கந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின் திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஜமாத்துல் உலமா சபை  திருச்சி மாவட்ட தலைவர்.மௌலானா இமாம் ரூஹூல் ஹக் கை  சந்தித்தார்.

இந்த நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, மாவட்டத் துணைத் தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முபாரக் அலி, அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.