ADVERTISEMENT
ADVERTISEMENT
வேலூர் மாவட்டம், வேலூர் மத்தியப் பெண்கள் தனிச் சிறையிலிருந்து நளினியும், வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலிருந்து சாந்தன், முருகன் ஆகியோரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து விடுதலையானார்கள். முருகன், சாந்தன் இருவரும் திருச்சியிலுள்ள தனி முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
நளினி காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் கிராமத்திலுள்ள தனது இல்லத்தின் வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “மத்திய, மாநில அரசுகளுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறோம். 32 ஆண்டுகள் ஆதரவளித்த தமிழக மக்களுக்கு நன்றி.” என்று கூறினார்.
Show comments