ADVERTISEMENT
ADVERTISEMENT
கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தென்காசியில் கனமழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், கடையம் மற்றும் கீழப்பாவூர் ஆகிய 5 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (07.07.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments