ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழ்நாட்டில் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்துவரப்படுவோர் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இரவு நேரங்களிலும் தனிப்பிரிவு போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றும், அதற்காக சிறப்பு தனிப்பிரிவு போலீசாரை தற்காலிகமாக நியமித்துள்ளனர். 10 ந் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடையும் வரை இரவு நேரங்களிலும் காவல் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் தங்கி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் பணியில் உள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் பணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
Show comments