மதுரை மேலூரில் வெள்ளலூர்நாடு எனப்படும் 62 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் ஏழைகாத்தம்மன், வல்லடிக்காரர் கோவில் இருக்கிறது. அந்த கிராம மக்களே சொந்த செலவில் வரி செலுத்தி கோயிலை காட்டியதோடு வருடா வருடம் பிரமாண்டமாக திருவிழாவும் நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் மட்டுமின்றி தமிழக அளவிலும் இந்த திருவிழாவானது மிகவும் பிரபலமான திருவிழா ஆகும்.
இதனையறிந்து அறநிலையத்துறை அதிகாரி விஜயன் மற்றும் ஏடிஎஸ்பி வனிதா உள்ளிட்டோர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதனை ஏற்காத மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மீறி கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறையிடம் மனு கொடுக்க பெருவாரியாக இருசக்கர வாகனத்தில் வந்து போராட்டம் செய்வோம் என எச்சரித்துள்ளனர். தற்போது வரை மக்கள் இடத்தை விட்டு கலையாததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.