Skip to main content

மீனாட்சியம்மன் கோயிலில் முழுமையாக கரோனா தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

Only those who have been fully vaccinated against corona at the Meenakshi Temple are allowed!

 

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் டிசம்பர் 13- ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள், அதாவது தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் இன்று (11/12/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், கரோனா நோய் 3- வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே வரும் டிசம்பர் 13- ஆம் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

 

திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கண்டிப்பாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

1. கரோனா தடுப்பூசி சான்றிதழ் நகல் வைத்திருப்பது. 
2. கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ்.
3. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது. 
4. வாட்ஸ் ஆப் செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல். 
5. கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதி செய்வது.

இவ்வாறு கோயில் நிர்வாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அங்கித் திவாரி கைது! - தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சொல்வது என்ன? 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Ankit Tiwari arrested! What does the Tamil Nadu Anti-Corruption Department say?

 

திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையால் ரூ. 20 இலட்சம் பெற்ற அமலாக்கத்துறை அலுவலர் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. 

 

அதில், ஒன்றிய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வரும் அங்கித் திவாரி என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரைத் தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

 

அதன்படி, அந்த அரசு ஊழியர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும் பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார். கடந்த 01.11.2023 அன்று அரசு ஊழியர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார். பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான ரூ. 51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார். இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர், 30.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டாவது தவணையாக 01.12.2023 காலை 10.30 மணியளவில் ரூ. 20 லட்சத்தைப் பெற்றுக்கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

 

இச்சோதனையின்போது இவருக்குத் தொடர்புடைய பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இவர் அமலாக்கத்துறையின் பெயரில் எவரேனும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மதுரையில் அனுமதி மறுப்பு! - சென்னை அலுவலகத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்த சி.ஆர்.பி.எப்!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Denial of permission in Madurai! CRPF took control of the Chennai office!

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவமும், அவரிடத்தில் இருந்து லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். 

 

இதில் பேரம் நடந்து பிறகு 51 லட்சம் ரூபாய் லஞ்சமாக தருவதில் வந்து முடிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாய் முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையைக் கேட்டுள்ளார் அங்கித் திவாரி. அதனைக் கொடுக்கும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கித் திவாரியை கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த விவகாரத்தில் மேலும், அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஏனைய அமலாக்கத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொள்ளலாம் எனத் தகவல் பரவியது. 

 

இதனைத் தொடர்ந்து உடனடியாகச் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், நேற்று (1ம் தேதி) இரவு சாஸ்திரி பவனில் வழக்கமாக இரவு பாதுகாப்புப் பணியில் இருக்கும் தனியார் பாதுகாப்பு அலுவலர்களிடம் இருந்து வளாகத்தின் சாவியை வாங்கிய சி.ஆர்.பி.எப் வீரர்கள், வளாகத்தின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர். மேலும், அங்கு ஏராளமான சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 

முன்னதாக நேற்று மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, முதலில் எல்லை பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். பிறகு நள்ளிரவு சமயத்தில் துணை ராணுவப் படையினர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்களைத் தமிழ்நாடு காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். அனுமதி மறுத்தது குறித்து துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு போலீஸாரிடம் கேட்டபோது, முறையான அனுமதி பெற்று பிறகு உள்ளே வாருங்கள் என வெளியே நிறுத்தி வைத்தனர். மேலும், அலுவலகம் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், தற்போது வழக்கு தமிழ்நாடு மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் பதிவாகியுள்ளது. அதனால் தற்போது மாநில அரசின் முறையான அனுமதியின்றி உள்ளே அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அங்கு மேலும் பரபரப்பான சூழல் நிலவியது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்