ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் நேற்று (02.12.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற அறிவிப்பின் மீது வெள்ளை அறிக்கை கேட்ட குருசரவணனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Show comments