ADVERTISEMENT

அந்தந்த பள்ளியிலேயே 5,8ம் வகுப்பு தேர்வு- தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!

11:39 AM Jan 22, 2020 | santhoshb@nakk…

தமிழக தொடக்கக் கல்வி இயக்குநர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT


மேலும் அரசு பள்ளிகள் நீங்கலாக, பிற பள்ளிகளில் 5- ஆம் வகுப்புக்கு ரூபாய் 100, 8- ஆம் வகுப்புக்கு ரூபாய் 200 தேர்வுக் கட்டணம் வசூலிக்கலாம் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT