உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவகாசம் கேட்டது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், மீண்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டுள்ளது. இதன் காரணமாக அக்டோபர் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments