ADVERTISEMENT

கரோனா சிகிச்சை மையத்தைப் பார்வையிட்ட அமைச்சர்கள்!

04:56 PM May 16, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவின் சார்பில் தடுப்பு சிகிச்சை மையம் 200 படுக்கைகளுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரும் நேரில் சென்று ஆய்வு செய்து சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து சித்த மருத்துவப் பிரிவின் மூத்த மருத்துவர் காமராஜ் கூறுகையில், "தமிழகத்தில் முதன்முதலாக சித்த மருத்துவத்தைக் கொண்டு கரோனாவைத் தடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் மருத்துவர்கள் தொடர்ந்து இங்கு பணியாற்ற உள்ளனர். நோயாளிகள் தங்கிச் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவத்தின் மீது நம்பகத்தன்மை இல்லாத நோயாளிகள் சித்த மருத்துவத்திற்கு தாராளமாக வரலாம். நிச்சயம் குணமடைய செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. சிகிச்சைப் பெற வரக்கூடிய நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உடற்பயிற்சி, யோகா மற்றும் பாரம்பரியமான விளையாட்டு பயிற்சி முறைகள் அனைத்தும் கற்றுத்தர இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT