தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை (16.12.2019) கடைசி நாள் என்பதால், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தன்னைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என யாரிடமும் வேட்பாளர்கள் நிர்பந்திக்கக் கூடாது. அதேபோல் கடலூரில் 6,039 பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்காக இதுவரை 12,235 பேரின் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தன்னைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என யாரிடமும் வேட்பாளர்கள் நிர்பந்திக்கக் கூடாது. அதேபோல் கடலூரில் 6,039 பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்காக இதுவரை 12,235 பேரின் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Show comments