ADVERTISEMENT

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 20% இடம் அதிகரிப்பு!

08:26 AM Sep 11, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் சேர அதிகளவில் விண்ணப்பங்கள் வந்ததையடுத்து, கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது. அதன்படி, கலை பிரிவில் 20%, அறிவியல் பிரிவில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% மாணவர்களை கூடுதலாக சேர்க்கலாம். கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தியுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92,000 இடங்கள் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 20% இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT