வேலூரில் நேற்று தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் சிறந்த தொலைத்தொடர்பு சேவைக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை பி.எஸ்.என்.எல் முதன்மை மேலாளர் ராஜூ பெற்றுக்கொண்டார்.
தமிழக அரசு சார்பில் நேற்று வேலூரில் நடைபெற்ற விழாவில், தொலைத்தொடர்பு துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டத்திற்கு அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் விருது வழங்கினார். அந்த விருதினை பி.எஸ்.என்.எல் முதன்மை மேலாளர் ராஜூ பெற்றுக்கொண்டார்.
அதேசமயம் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், நிதி பற்றாக்குறை காரணமாக அந்நிறுவனத்தின் 1.76 லட்சம் ஊழியர்களுக்குப் பிப்ரவரி மாதச் சம்பளத்தை கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.