ADVERTISEMENT

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1.35 லட்சம் பேர் கைது!

03:20 PM Apr 10, 2020 | santhoshb@nakk…


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT


இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு,பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 45,13,544 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT