ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

07:12 AM Mar 25, 2020 | santhoshb@nakk…

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 530ஐ தாண்டியது. குறிப்பாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனா பாதிப்பால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே நேற்று (24/03/2020) இரவு 12.00 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT