ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா!

06:37 PM Apr 27, 2020 | Anonymous (not verified)

உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இருந்தபோதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 52 பேரில் 47 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உள்ளநிலையில், 1,101 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT