ADVERTISEMENT

தமிழகத்தில் மீண்டும் ஒரே நாளில் 100-ஐ கடந்த கரோனா உயிரிழப்பு!!

06:48 PM Aug 25, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று மேலும் 5,951 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5,937 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநில மற்றும் நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 52,128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,270 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. சென்னையில்மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,27,949 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 70,221 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 6,998 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,454 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 107 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 21 நாட்களாக 100-ஐ கடந்திருந்த கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக 100 -க்கும் கீழ் குறைந்த நிலையில் தற்பொழுது உயிரிழப்பு மீண்டும் 100-ஐ தொட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,721 ஆக அதிகரித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT