தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 38லிருந்து 40 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியைச் சேர்ந்த 49 வயதான நபருக்கு கரோனா உறுதியானது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியைச் சேர்ந்த 49 வயதான நபருக்கு கரோனா உறுதியானது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது ஆணுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து திரும்பிய காட்பாடியைச் சேர்ந்த 49 வயது ஆணுக்கு வேலூர் (சி.எம்.சி) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இந்த 40 பேரில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் குணமடைந்துள்ளனர்.
Show comments