ADVERTISEMENT

நவம்பர் 25- ஆம் தேதி அரியலூர், பெரம்பலூரில் தமிழக முதல்வர் ஆய்வு!

09:55 AM Nov 22, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் நவம்பர் 25- ஆம் தேதி ஆய்வு மேற்கொள்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார். மேலும், இரு மாவட்டங்களின் மகளிர் சுய உதவிக்குழுவினர், விவசாய அமைப்பினரிடமும் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ஏற்கனவே 31 மாவட்டங்களில் ஆய்வு செய்த நிலையில், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT