ADVERTISEMENT

டிச. 16, 17-ல் கரூர், பெரம்பலூர், அரியலூரில் முதல்வர் ஆய்வு!

08:59 AM Dec 12, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வரும் டிசம்பர் 16, டிசம்பர் 17- ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

ADVERTISEMENT

இந்த மூன்று மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

அதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் அரசு விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முனைவோருடன், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாட உள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT