ADVERTISEMENT

செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் செப்.11- ஆம் தேதி முதல்வர் ஆய்வு!

04:42 PM Sep 08, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய இரு மாவட்டங்களில் செப்டம்பர் 11- ஆம் தேதி அன்று கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்ய இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, மாவட்டங்களில் முடிவுற்றத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

ஏற்கனவே, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT