ADVERTISEMENT
'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ADVERTISEMENT
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் தலைமைச் செயலாளர் சண்முகம், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நிவாரண பணி, நீர்நிலைகள் கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று மதியம் மத்தியக் குழு தமிழகம் வரவுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments