ADVERTISEMENT

மே- 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

03:58 PM Apr 29, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஊரடங்கு மே- 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ADVERTISEMENT


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2- ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் கரோனா கட்டுக்குள் வராத நிலையில் தமிழக அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT