18 எம்.ஏல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், அணுகுண்டும் அல்லாமல், புஸ்வாணமாகவும் இல்லாமல்.. ஊசிவெடியாய் தீர்ப்பு வந்துள்ளது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
18 எம்.ஏல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்வின்றி தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு ஒரு தீர்வை தரும் தமிழக அரசியலில் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தீர்ப்பு தீர்வில்லாமல் வந்துள்ளது.
யாருக்கும் சாதகம், யாருக்கும் பாதகம் இல்லாமல் தீர்ப்பு வந்துள்ளது. அணுகுண்டும் அல்லாமல், புஸ்வாணமாகவும் இல்லாமல்.. ஊசிவெடியாய் தீர்ப்பு வந்துள்ளதுதகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள்தான் தீர்ப்பின் மூலம் திரிசங்கு நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Show comments