ADVERTISEMENT

தமிழ்நாடு தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்திய தெய்வத் தமிழ்ப் பேரவை!

11:17 AM Jul 06, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்வழிக் கருவறைப் பூசைக்குச் சட்டம் இயற்றுக, ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்குக என தமிழ்நாடு தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) உழவர் சந்தை அருகில் 03.07.2021 அன்று காலை 10 மணி அளவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த்திரு சிவனடியார் பூவனூர் தனபால், தமிழ்த்திரு சிவனடியார் கோட்டேரி சிவக்குமார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. அஞ்சை ம. இராவணன் ஆகியோர் உரையாற்றினர். இளம் தமிழ்த்திரு சிவனடியார் இளவரசன் நன்றி கூறினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள், மகளிர் ஆயத் தோழர்கள் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT