நாளை (14/04/2020) தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வரின் வாழ்த்துச் செய்தியில், "தமிழர் வாழ்வில் இன்ப ஒளி பெருகி நலம், வளம் பெருகட்டும்; தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும். தமிழக மக்கள் பன்னெடுங்காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
இதனிடையே கேரளாவின் புத்தாண்டு தினமான விஷூ திருநாளையொட்டி மலையாள மக்களுக்கும் தமிழக முதல்வர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், மலையாளமொழி பேசும் மக்களுக்கு அன்பு, மகிழ்ச்சி வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும். நன்னாளில் பெரியவர்களிடம் குழந்தை, இளைஞர்கள் ஆசிப் பெற்று விஷூ கைநீட்டம் எனும் பணப்பரிசை பெற்று மகிழ்வர்" என்று தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments