தொலைபேசியில் தொடர்பு கொண்டு யாரேனும் வங்கி விவரங்களை கேட்டால் தெரிவிக்கக்கூடாது. வங்கிகள் ஒருபோதும் தொலைபேசி வழியே கணக்கு விவரங்களை கேட்பதில்லை. ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏடிஎம்களில் பணம் எடுக்க செல்லும் போது தங்களை யாரேனும் கவனிக்கிறார்களா என்பதை உற்று நோக்க வேண்டும். ஏடிஎம் இயந்திரத்தில் அட்டையை செலுத்தும் முன்பு அதில் ஏதோ ஒரு ரகசிய கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதா என்று கவனிக்க வேண்டும். நெட்பேங்கிங் மற்றும் ஏடிஎம் அட்டை ரகசிய எண்ணை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் சென்னையில் பௌலின் என்ற ஆசிரியர் ஒருவர் மொபைலில் உள்ள தனியார் பண பரிவர்த்தனை செயலியில் பணம் அனுப்பியது குறிப்பிட்ட நபருக்கு சென்றடையாததால் அந்த நிறுவனத்தின் சேவை எண் என நினைத்து தவறான எண்ணுக்கு கால் செய்து அதன் மூலம் ஆன்லைன் மோசடி நபர்களால் பணம் திருப்பட்ட சம்பவமும், சென்னை வடபழனியில் கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணி தொகையான 74 ரூபாயை மீட்பதற்காக போலி சேவை எண்னை தொடர்பு கொண்டு 40 ஆயிரம் ரூபாயை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.