ADVERTISEMENT

சாலையில் உள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்ந்தவர்கள்..! (படங்கள்)

04:10 PM May 20, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக அனைத்து இடங்களிலும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த மே 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் பலத்தரப்பட்ட மக்களும் கடும் கடினமான் சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

கரோனா ஊரடங்கினால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில் வீடுயில்லாமல், உணவில்லாமல் சாலையோரம் வசித்து வருபவர்கள் பலரும் உள்ளனர். நடுத்தர மக்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்ற மக்கள் மற்றும் சாலையோர மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையை சுமுகமாக நடத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் உணவளித்து வருகின்றனர்.

மேலும் பலர் சாலையோர வசிக்கும் மக்களுக்கு தங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவி செய்து வருகின்றனர். சிலர் உணவு, தண்ணீர் பாட்டில், முக கவசம் ஆகியவற்றை பாதிப்பில் உள்ளவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று கொடுத்து உதவுகின்றனர். அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாலையில் உள்ளவர்கள் மற்றும் பசித்தோர்க்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT