தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் இன்று (20.9.2019) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ்.பி. ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்றது.
ADVERTISEMENT
இதில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளரும், கர்நாடக மாநில எம்எல்ஏவுமான சௌமியா ரெட்டி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கர்நாடக பொறுப்பாளருமான விஜயதாரணி எம்எல்ஏ மற்றும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவிகள் மற்றும் வட்டார, நகர தலைவிகளும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments