ADVERTISEMENT
ADVERTISEMENT
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீனவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.
இதனிடையே 5 படகுகளைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், மீன் பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களைச் சேதப்படுத்தி, இனி இந்த பகுதிக்கு மீன் பிடிக்க வரக்கூடாது என்று கூறி விரட்டியடித்துள்ளனர். இதன் காரணமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
ADVERTISEMENT
Show comments