ADVERTISEMENT

பிரதமரின் காணொளி கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பு!

03:58 PM Nov 03, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (03/11/2021) காணொளி காட்சி வாயிலாக மாநில முதலமைச்சர்களுடன் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி.செந்தில் குமார் இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT