ADVERTISEMENT

தற்கொலைப்படை தாக்குதல்... தமிழக ராணுவ வீரர் வீரமரணம்!

03:30 PM Aug 11, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் இன்று எதிர்பாராத விதமாகத் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு இரண்டு பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எல்லையில் பயங்கரவாத தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லஷ்மணன் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தது தெரியவந்துள்ளது. ராணுவ வீரர் லஷ்மணனின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT