ஈரோட்டில் இன்று பா.ஜ.க. கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக தலைவரான தமிழிசை கலந்து கொண்டார். கட்சி நிர்வாகிகள் சில இளைஞர்களை கூட்டி வந்து கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்தனர். அப்போது ஒரு நிர்வாகி "ஏப்பா தம்பிகளா நடிகர், நடிகை கூடத்தான் செல்பி எடுப்பீங்களா..?
நம்ம தமிழிசை அக்கா கூடவும் செல்பி எடுங்க உங்க போட்டோவெல்லாம் பேப்பர்ல போடுவாங்க" என்று உற்சாகப்படுத்த அதுக்கென்ன எடுத்துட்டாப் போச்சு.. என்று சில இளைஞர்கள் தமிழிசையுடன் செல்பி எடுத்தனர். இன்னொரு நிர்வாகியோ "அடப்பாவிகளா நம்ம பேச்சை யும் பசங்க நம்புறாங்களே..." என மெதுவாக கூற நிர்வாகிகள் கல கல வென சிரிக்க தொடங்கினார்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments