ADVERTISEMENT

உடைந்த கொள்ளிடம் பாலத்தின் சீரமைப்பு வேலையை சீர்குலைக்கும் அமைச்சரின் ஆதரவாளர்கள்..!

08:08 AM Sep 11, 2018 | Anonymous (not verified)


கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவிரியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் தண்ணீர் வேகத்தை குறைப்பதற்காக கொள்ளிடம் அணையை மூட முயற்சிக்கும் போது கொள்ளிடம் அணை உடைந்து. இதை சீரமைப்பதற்காக 90 லட்சம் ரூபாய் உடனடியாக ஒதுக்கி சீரமைப்பு பணியை துவக்கி வைத்தார்கள் லோக்கல் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், மற்றும் வளர்மதி. இவர்கள், உடைந்த கொள்ளிடம் பாலத்தில் அரசலூர் பாலு என்பவர் 65 லாரிகளை வைத்து கொண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பம் முதல் பணி செய்து வந்தார்கள்.

இடையில் லோக்கல் அமைச்சர்களின் வேலையும், அதை துரிதப்படுத்தும் பணி கொஞ்சம் தொய்வாக இருப்பதை உணர்ந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் உடைந்த அணையை பார்வையிட வந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெறுகிறது. 40 சதவீகித பணிகள் கூட முடியவில்லை என்று ஒரே போடாக போட.. இதனால் அதிர்ச்சியடைந்தார் முதல்வர் எடப்பாடி.

ADVERTISEMENT



கரூர் போக்குவரத்து துறை அமைச்சரை உடனே களத்தில் இறக்கி பாறைகளை கொண்டு வரும் பொறுப்பை ஓப்படைத்தார். இதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி உத்தரவின் பெயரில் போக்குவரத்து துறை அமைச்சரின் கரூர் விஜயபாஸ்கருக்கு வேண்டப்பட்ட ஒப்பந்தகாரர். கடந்த சில நாட்களாக உடைந்த கொள்ளிடம் அணையை பாறைகள் அடைக்கும் வேலையை செய்து வந்தார்.

இந்த நிலையில் தீடீர் என இரவு நேரத்தில் பாறைகளுக்கு இடையில் மண் கொட்டும் பணிநடைபெற்றது.

ஆரம்பத்தில் ஒப்பந்தகாரான அரசலூர் பாலுவிடம் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர். மண் கொட்டும் பணியில் ஈடுபட்ட போது அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரான ரவி சரவணன் ஆகியோர் நான் சொல்லும் இடத்தில் தான் மண் கொட்ட வேண்டும் என்று கண்ணனிடம் தகாராறு செய்தனர்.

ADVERTISEMENT


இவர்களுடைய தகராறு எந்த ஏரியாவையே அதிர செய்தது அப்போது அங்க இருந்த பொது பணித்துறை உயர் அதிகாரி ஏன் இப்படி பிரச்சனை பண்றீங்க என்று கேட்ட போது… அவரை தரகுறைவாகவும் ஒருமையிலும் அமைச்சரின் ஆதரவாளர்கள் திட்ட ஆரம்பித்தனர்..

பொதுபணித்துறை உயர்அதிகாரியை திட்டியதால் இரவு பணியில் இருந்த உதவி பொறியாளர்கள் ஆத்திரமடைந்தனர். அப்போது ஒப்பந்தகாரர் அரசலூர் பாலு என்பவர் தன் பணியாளர்களை பணியை நிறுத்த சொல்லி விட்டு வீட்டிற்கு திரும்பி விட்டார்.

இந்த தகவல் தன் ஆதரவாளர்கள் மூலமாக அமைச்சருக்கு தெரிய வரவே, அவர் உடனடியாக தலையிட்டு முதலமைச்சரின் நேரடி பார்வையில் நடைபெறுகிறது. இதனால். தன் ஆதரவாளர்களக பணியில் இருந்து விலக்கி கொள்வதாக கூறியதை தொடர்ந்து பல மணி நேரம் நின்ற வேலை மீண்டும் தொடங்கியது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT