ADVERTISEMENT

1 முதல் 9- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு! 

09:48 AM May 07, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்புகளுக்கான கோடை விடுமுறை வருகிற மே 14- ஆம் தேதி அன்று தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் கரோனா காரணமாக, பள்ளி வகுப்புகள் முழுமையாக நடைபெறாத நிலையில், இறுதித் தேர்வுகள் வரும் மே 13- ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன. அதே நேரத்தில், கோடை காலம் தொடங்கியுள்ளதால், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு மட்டும் வந்தால் போதுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்புகளுக்கு வரும் மே 14- ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 13- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் 23- ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT