ADVERTISEMENT
சென்னையில் இன்று (27.10.2021) நீட் தேர்வை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கோரி ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கச் செயலாளர் மயூக்பிஸ்வாஷ், மாநிலத் தலைவர் AT. கண்ணன் மற்றும் மாநிலச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments