ADVERTISEMENT

மாணவி தற்கொலை - ஆசிரியர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு!

03:14 PM Nov 12, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று (11.11.2021) இரவு தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த அறையில் அவர் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், பள்ளி ஆசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரைக் குறிப்பிட்டு, தனக்கு இவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்து வீட்டிற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT