ADVERTISEMENT
இந்நிலையில் சென்னை வள்ளலார் நகரில் நடைபெற இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தடைந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி.நட்டா, ''பொருளாதாரத்தில் நம்மை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். ஒரு சில நாட்களில் 234 தொகுதிகளிலும் பாஜக பாதயாத்திரையை நிறைவு செய்யும். திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து வருகிறது. மாநில அரசுக்கு மனசாட்சி இல்லை. நான் வரும்போது தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன. நான் வரும்போது கடைகள் மூடப்பட்டிருந்தன. இவை எமர்ஜென்சி போல் உள்ளது. ஊழலற்ற அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். ஊழல் அரசை அரசியல்வாதிகளை மக்கள் தூக்கி எறிவார்கள். பாஜக தலைவர்களின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது'' என்றார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments