ADVERTISEMENT

''செந்தில் பாலாஜியை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' - கனிமொழி எச்சரிக்கை!

08:38 PM Apr 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். ''திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுகவை யாரும் மிரட்டவும் முடியாது, அச்சுறுத்தவும் முடியாது. திமுக எழுந்தால் யாரும் தாங்க முடியாது. உங்களின் மிரட்டலை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் கனிமொழி.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT