மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தை புறக்கணித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ADVERTISEMENT
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று (18/11/2019) நடக்கும், மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று ஸ்டாலின் கடிதம்.
ADVERTISEMENT
கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து பணியாளர், நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் ஸ்வர்ணாவுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் தகவல் ஆணையரை தேர்வு செய்து விட்டு பெயரளவில் கூட்டம் நடப்பதாக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். தகவல் ஆணையரை தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்ப இன்று (18/11/2019) கூட்டம் நடக்கிறது.
Show comments