ADVERTISEMENT

மாநிலங்களவைத் தேர்தல்- மே 24 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது! 

11:39 PM May 16, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மே 24- ஆம் தேதி அன்று தொடங்குகிறது. மே 31- ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் ஜூன் 1- ஆம் தேதி அன்று தொடங்கும். வேட்பு மனுவைத் திரும்பப் பெற வரும் ஜூன் 3- ஆம் தேதி அன்று கடைசி நாள் ஆகும்.

வரும் ஜூன் 10- ஆம் தேதி அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் 10- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT