ADVERTISEMENT
மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வினரும், முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ADVERTISEMENT
4-வது நாளான இன்று மாலையில் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர், கலைஞருக்கு உதவியாளராக இருந்த நித்யா அஞ்சலி செலுத்தினார். மு.க.தமிழரசு தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
ADVERTISEMENT
Show comments