கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் பன்னிமடையை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 26ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது. இது வெறும் கொலை அல்ல சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்த நிலையில் இந்த வழக்கில் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கோவை துடியலூர் பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன் பாளையத்திலுள்ள குழந்தையின் வீட்டிற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Show comments